தேவையானப் பொருட்கள்:
மல்லி இலை – 1 கட்டு
சிகப்பு மிளகாய் – 7 அல்லது 8
துண்டு பெருங்காயம் – சிறிய துண்டு
உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மல்லி இலையில் உள்ள குப்பைகளை நீக்கி விட்டு, தண்ணீரில் நன்கு அலசி, பின் பொடியாக அறிந்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,துண்டு பெருங்காயம் இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணையில் அறிந்த மல்லி இலையை வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் உளுந்தம் பருப்பை இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் மல்லி இலை(வதக்கியது),மிளகாய் வத்தல்,துண்டு பெருங்காயம்,உப்பு, புளி (தண்ணீரில் ஊறவைத்து) இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
நன்கு அரைத்தப் பிறகு வறுத்த உளுந்தம் பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து பரிமாறவும்.
இந்த மல்லி துவையல் தயிர் சாதம், ரசம் சாதம் இவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.