தீக்குச்சிகள்:
பெட்டிக்குள் உள்ளவரை
உனக்கு சாவில்லை !
வெளிவந்து பற்றிக் கொண்டால்
பிணமாகிறாய்….
சில நேரங்களில்
பிணமாக்குகிறாய் !
ஏக்கம்:
அன்னாந்து விமானம்
பார்த்தது
வெறும் வேடிக்கையல்ல…
ஏழைகளின் ஆகாய அளவு
எக்கமும்தான்…..
வலி:
மறந்து விடு
எனை நீ…
சொன்ன தருணத்திலேயே
இறந்து விட்டேன் …
உணர்வற்ற உயிராய்
இன்று நான்….
கவிஞன் :
கல்லாய் இருந்தவனை
சிலையாய் செதுக்கினாய்….
காளையாய் வலம் வந்தவனை
கலைஞன் ஆக்கினாய் ….
திசை தெரியாதிருந்தபோது
வழி காட்டினாய் …
இத்தனையும் ஆக்கிய நீ
சொல்லாது பிரிந்த பொழுது
கவிஞன் ஆக்கி விட்டாய்…