நண்பர் முருகன் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய கவிதை. இதோ உங்கள் பார்வைக்காக.
வறண்ட தமிழகம்:
காவிரி வடிகாலாகிறது
கல்லணை வரலாறாகிறது
நன்செய் நிலங்கள்
மானாவாரிகளாகின்றன!
விவசாயிகளைத்
“தற்கொள்ளிகள் “
ஆக்கியதுதானோ?
அறுபத்திரெண்டாண்டு கால
இந்தியக் குடியரசின் சாதனை !
பாலை:
முல்லையும் குறிஞ்சியும்
உறைமை திரிந்தால்
பாலை!!!
நடுவண் அரசும்
மாநில அரசும்
முறைமை திரிந்தால்
காவிரி டெல்டாவும்
பாலைதான்!
காவிரி தண்ணீர் விடயத்தில்
குடியரசு
முடியரசிடம்
தோற்றே விட்டது!
பெருந்தன்மையா? கையாலாகாத்தனமா?
காவிரி நீரை இலவசமாகப்
பெற முடியவில்லை
கன்னட பொன்னி அரிசியைக்
காசுக்கு வாங்குகிறார்கள்
தமிழர்கள்!?