தேவதத் இந்தியாவின் மறுபிறப்பையும், வாழ்க்கை ஒரு முறை என்ற பார்வை பற்றியும் அதை வணிகத்தில் எவ்வாறு ஒப்பிடுகிறார். மேலும் கணேசன்-முருகனின் உலகம் சுற்றும் கதையை அவரின் பார்வையிலிருந்து விளக்கும் விதமும் அருமை. இது வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இங்கு பகிர்கிறேன். அலெக்சாண்டருக்கு வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லப்பட்ட விதத்திற்கும், இந்திய முனிவருக்கு உள்ள வாழ்க்கை பற்றிய பார்வை என பட்டையைக் கிளப்பியுள்ளார். அவசியம் பாருங்கள். https://www.youtube.com/watch?v=I7QwxbImhZI
Category Archives: காணொளி
அறிவொளி நகைச்சுவை – காணொளி
அறிவொளி அவர்களின் வழக்காடு மன்ற பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும். தோற்கும் பக்கத்தில் நின்று கொண்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் (குண்டக்க மண்டக்கா ஸ்டைலில் தனது வாதத்தை வைக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க இயலாது என்பதை நம்மால் அடித்துச் சொல்ல முடியும். இணையத்தில் தேடி எடுத்த அவரது பேச்சுகளின் காணொளி இணைப்பு இதோ: https://www.youtube.com/watch?v=v58Kemuecpk https://www.youtube.com/watch?v=txeYGC9INgc https://www.youtube.com/watch?v=5_W6NG8BAI8 https://www.youtube.com/watch?NR=1&v=CQl2GPj940E&feature=endscreen https://www.youtube.com/watch?v=hs3tZglLTmI
கோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:
குடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான India’s Best Innovation Award ஐ, மே 18, 2009 அன்று இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். … Continue reading
நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி
கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்: ” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, … Continue reading
ஒருநாள் – தமிழ் குறும்படம் காணொளி
நீண்ட நாட்களாக “ஒருநாள் ” என்ற தமிழ் குறும்படத்தை எனது இணையதளத்தில் இணைக்க நினைத்தேன். இன்றுதான் முடிந்தது. விபத்துகளும், வேண்டத்தகாத நிகழ்வுகளும் நமக்கோ, நமக்கு வேண்டிய நமது சுற்று எல்லைக்குள் உள்ளவர்களுக்கோ நடக்கும் போது மட்டுமே அது மிகுந்த பாதிப்பை நம்முள் ஏற்படுத்துகிறது. இல்லையெனில் அது வெறும் செய்தியாக மட்டுமே நமக்குத் தோன்றுகிறது. ஊடகங்களில் குண்டு வெடிப்புகளோ, தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்திகள் வெறும் செய்தி அளவிலேயே நம்மை உணர வைக்கிறது. ஆனால் இந்த “ஒருநாள்” குறும்படமோ … Continue reading
காமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு
தாழ்த்தப் பட்ட இனத்தைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்பட்ட ஒரு சமூகமாகப் பார்க்கப் பட்ட நாடார் இனம், தங்களின் போராட்டக் குணத்தால் பல உயிர்களை இழந்தாலும் இன்றைய சமூகத்தின் அண்ணாச்சி என்ற அளவிளோடு அல்லாமல் தமிழகத்தின் வணிகத்தில் முக்கியப் பங்காற்றுவதும் , எல்லாத்துறைகளிலும் முன்னேறிய சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த காமராஜர் பற்றி நெல்லைக் கண்ணன் ஆற்றிய உரையில், அவர் குறித்த பல தகவல்களை அறிந்து கொண்டேன். நெல்லை கண்ணன் அவர்கள் காமராஜர் … Continue reading
T .ராஜேந்தரும் சிஷ்யப் பிள்ளையும்
T . ராஜேந்தர் பப்லூவை தனது படத்தில் அறிமுகம் செய்ய, பப்லூவை நடித்துக் காண்பிக்க சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவைக் காட்சியை நீங்கள் பலமுறைக் கண்டிருக்கலாம். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை நீங்கள் ரிலாக்ஸ் ஆக விரும்பினால் கீழ்க்காணும் காணொளியை கண்டு மகிழுங்கள். பெரும்பாலும், தனது குருநாதரைப் பற்றி உண்மையில் எந்த நடிகரும் இதுபோல செய்து காண்பிக்க மாட்டார். பப்லூ செய்து காண்பித்திருக்கிறார். அது ஒருவேளை T . ராஜேந்தர் என்பதால் என்றே நினைக்கிறேன். பப்லூ, ராஜேந்தர் பற்றி … Continue reading
அறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு
அறிவொளி தனக்கே உரிய, குழப்பமாக இருப்பது போல ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும், பின்னர் அதற்கு தகுந்த உதாரணம் கொடுத்து, மெய்பிப்பதும் மிக அருமையாக இருக்கும். அவ்வகையில் இந்த காணொளியும் மிக அருமை. அவரின் நகைச்சுவைப் பேச்சு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒரு சாம்பிள் உங்கள் பார்வைக்காக. ஏதேனும் காணொளி வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ கிடைத்தால் இணைப்பு தாருங்கள். சுகிசிவம் அவர்கள் தமது இயல்பான பேச்சு நடையில் சராசரி இந்தியனின் எண்ணத்தை நகைச்சுவையோடு மிக அழகாக … Continue reading